தடையுடைத்த கதவிடைத்தாழ்

அவளிடை வன்புகும் அழகியகாற்றும் இன்புறும்
பொழிலிடை தேன்வண்டு துழவியதேகம் தன்மறவும்....

குழலிடைகூசி குறைததும்பும் மெல்லிசையும் இதம்தரும்
குழவிகொட்டிய பிறைமார்பாய் சொல்லிடாது பதமிழக்கும்...

புனலிடை பொங்கிடும் சுனைநீராய் அவையேறும்
தனதிடை தங்கியகலை நினைவாலே சுவையேற்றும்...

மதயானை உதட்டோரம் வதம்காண பதனிடுமே
இதழ்பொருத்தி அதனாசை இதம்காண நிதம்வருமா...?

பல்லாண்டு நில்லாதென வெல்லாமனம் வில்லானது
இல்லாதுனை பொல்லாக்கீரை வல்லாரையுண்டு செல்லாதது...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (21-Mar-18, 8:16 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 43

மேலே