அண்ணனின் திருமண வாழ்த்து

கருவேலம் பூமியில
கடல்காற்று பாட்டிசைக்க
காடு கரையெல்லாம்
கட்டவுட்டு கொடி பறக்க
கலாம் அய்யா பிறந்த மண்ணில்
கல்யாணம் நடக்குதய்யா....

புன்னகை பூவரசன்
புதுமாப்பிள்ளை ஆனாரு..!
புத்தாடை பட்டுனிலே
புதுநிலவாய் ஜொலிக்கிறாரு..!

அன்புள்ள அன்னக்கிளி
அண்ணியாக வந்துட்டாங்க..!
அண்ணனுக்கு ஏத்த ஜோடி
அம்சமாக இருக்காங்க..!

குணமகனின் குணத்திற்கு
குறைவில்லாத திருமகள்..!
மணமக்களை வாழ்த்தி விட
மனசெல்லாம் காத்திருக்கு..!

வாழைமரம் ரெண்டு வெட்டு
வாசலிலே தோரணம் கட்டு
வாசமலர் அதிகம் வைத்து
வானவில்லாய் மாலைகள் கட்டு..!

பன்னீரும் சந்தனமும்
பந்தங்களை வரவேற்க...
பங்காளி போட்டியெல்லாம்
பந்தியில பரிமாற...

பழகிய நட்புகள்
படையாக குவிந்து வர...
பாசமலர் குடும்பம்
நேசத்தால் நிறையட்டும்..!

அடைமழையாய் அர்ச்சனை பூக்கள்
அழகாக ஆசிர்வதிக்க...
மடை திறந்த மகிழ்ச்சியாக
மணமக்கள் வாழட்டும்..!

மடை திறந்த மகிழ்ச்சியாக
மணமக்கள் வாழட்டும்..!!!

இனிய
திருமண
நல்வாழ்த்துக்கள் அண்(ணி)ணா..!!!!!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (21-Mar-18, 8:16 pm)
பார்வை : 134

மேலே