எமனையும் வரவேற்போம்

கண்ணோடு இமையாக
கடலோடு அலையாக
காதலில் மிதந்திருப்போம்..!

மண்ணோடு மரமாக
மலரோடு இதழாக
மகிழ்ச்சியில் பூத்திருப்போம்..!

விண்ணோடு நிலவாக
விரலோடு நகமாக
விலகாமல் நாமிருப்போம்..!

உன்னோடு நானாக
என்னோடு நீயாக
எமனையும் வரவேற்போம்..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (21-Mar-18, 8:34 pm)
சேர்த்தது : இராஜ்குமார்
பார்வை : 112

மேலே