காதல் நதியே
காதல் நதியே
காதல் நதியே
காதல் தாகம் தீர்த்துவிடு..!
காலதாமதம்
நீ செய்தால்
கருகி போகுமே என்னுயிரு..!
மனசுல உனை சுமந்து
என் மனநலம் பாதிக்குதடி..!
மனைவியாய் உனை நினைத்து
கவி மழைகள் பொழியுதடி..!
நினைவில் உனை வைத்து
என் நித்திரை தொலையுதடி..!
நிறத்தை தேடும் வானவில்
நீலவானத்தில் அலையுதடி..!
உன் நிழலிடம் கேட்டு பாரு
நிலாவாய் உன்னை தொடர்கின்றேன்..!
நித்தமும் இதுவே பொழப்பாக
நிம்மதி இதனில் தேடுகின்றேன்..!
என் கனவுல வந்து பாரு
என் காதல் கோவில காட்டுறேன்..!
அதில் கடவுளாய் உனை வைத்து
தினம் கவிதையால் பூஜிக்கிறேன்..!
உன்னை காதலிக்க சொல்லவில்லை
என்னை காப்பாற்ற சொல்கிறேன்..!
கடலை தேடும் மீனுக்கு
கருணை செய்திட கெஞ்சுகிறேன்..!
மறுப்பு எதுவும் சொல்லிராதே
வெறுப்பு கூட காட்டிராதே
மறந்துவிட நீ சொன்னால்
உயிர் பிரிந்துவிட எண்ணிவிடும்..!
சம்மதம் நீயும் சொல்லிவிடு
சங்கமம் என்னுள் ஆகிவிடு
சாந்தமாக நீ போனால்
உடல் சாம்பலாக பறந்துவிடும்..!
சாந்தமாக நீ போனால்
உடல் சாம்பலாக பறந்துவிடும்..!!!