காதல் கிறுக்கல்கள்

கூட்டம் கூட்டமாய்
துறவறம் தரித்து
இறையை நாடிச்செல்கிறது
பூக்களெல்லாம்
உன்னை அடைய இயலா
விரக்தியில்….!

ஒற்றை நேர்கோட்டில்
நம் விழிகள்
சங்கமிக்கும் நேரமெல்லாம்
உன் சந்திரமுகம்
சிவந்து போய்விடுகிறதே…!
ஓ… இதுதான் சந்திர கிரகணமா…!

உன் வீதியெங்கும்
விரவிக்கிடக்கும்
மணல்களின் எண்ணிக்கையையும்
சொல்லிவிடுவேன்
இன்னும் ஓரிருமுறை
உன் வீதியில் நடந்துசென்றால்….!

பால்யம் முதல்
பருவம்வரை
நீ விளையாடி மகிழ்ந்த
உன் வீதியை உற்றுப்பார்
அதில் உன் பாதச்சுவடுகளைவிட
என் பாதச்சுவடுகள் தடயம்
சற்று மிகுதியாகவே இருக்கும்…!

உன் வீதிமணல்
கடத்தி கடத்தியே
ஒரு காதல் கோட்டை
கட்டிவைத்திருக்கிறேன்
அதில் நீ எப்போது குடியேறுவாய்…?

குடியேறிவிட்டேன்
கோயிலில்லா ஊரில்
உன் வீடு இருப்பதால்…!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (23-Mar-18, 10:25 am)
Tanglish : kaadhal kirukkalkal
பார்வை : 321

மேலே