கலையாத உறக்கம்

நீ பெற்று
எடுத்த
முத்து
உன் முகம் பார்த்து
கண்ணீர் வடிக்கிறானே
இன்னும்
உன் உறக்கம்
கலையவில்லையோ ..

உன் விழி திரைகள்
திறக்காதோ ஒரு நொடி

உன்னை சுற்றி
பூக்களும்
பூச்செண்டுகளும்
மணம் வீசி
பரப்புகிறதே

இன்னும்
உன் உறக்கம்
கலையவில்லையோ ..
உன்
விழி திரைகள்
திறக்காதோ ஒரு நொடி ..

உன் முத்து
ஒன்று
அவள் பெற்ற
அழகிய முத்துவின்
முகம் பாராமல்
உறங்க போனாயா
கல்லறை தொட்டிலில் .

என் அத்தை
இவள் என்று
யாரை சொல்லுவேன் ..

உன் முகம்
பார்க்கும் முன்பே
நீ தூங்கி போனாயோ
கல்லறை
என்னும் தொட்டிலில் ..

நீ உறங்குவது
கனவாகி
போகாதோ
என எண்ணுகிறேன்
தினம் தினம் ..

ஒரு நொடியாவது
விழியை திறந்து விடு
என் கனவிலாவது
உன் உறக்கம்
கலையட்டும் ..


.

எழுதியவர் : ரோஜா (23-Mar-18, 5:23 pm)
Tanglish : kalaiyatha urakam
பார்வை : 127

மேலே