மழை

வெண்மேக கொஞ்சலில்
கார்மேக பூத்ததோ
வெஞ்சுடர் காற்றினில்
இதமான தென்றலோ!

வான் மேக தூரமோ
நிலமகள் ஏகாந்த தாகமோ
வெண்துளி பூவாக பொழியுமோ
மண் ணிதழ் தேனாக நனையுமோ!

மழை கரங்களாக மேவுமோ
மண்ணுடல் வீணையாக இசைக்குமோ
மழைத்துளி யின்பமாக சேருமோ
நில தேகமெங்கும் தேடுமோ!

மண்ணும் நீரும் இரண்டறக்
கலந் தாறாக ஓடுமோ!
ஆழியிலே சேர்ந்து - வானை
ஏக்கமாக பார்க்குமோ!

ஆழியிலே நீர்
நினைவலைகளாக ஓடுமோ!
இளந் தென்றலின் தீண்டலில்
மீண்டும் மேகமாக மாறுமோ!

வெண்மேக கொஞ்சலில்
மீண்டும் மழையாகத் தூருமோ!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (24-Mar-18, 6:40 am)
சேர்த்தது : ச செந்தில் குமார்
பார்வை : 2257

மேலே