அன்போடு ஒற்றை கவிதை கேட்கிறாய்

அரிதாக பூக்கும் காதலை
அழகாய் என்னிடம் சொல்லிவிட்டு
அன்போடு ஒற்றை கவிதை கேட்கிறாய் !
அணைத்துக்கொண்டே !

உன்னிடம் கவிதை சொல்வது இனிமைதான் !

சொற்கள் சேர்த்து
கவிப்பூ ஒன்றை சூட வேண்டும் !

அது வரை அணைப்பு என்பது
விடுபடாமல் இருப்பது உனக்கு சாத்தியமெனில்
எனக்கு கவி சொல்ல சாத்தியம்தான் !

எழுதியவர் : கவிஞர் முபா (24-Mar-18, 6:44 pm)
பார்வை : 89

மேலே