தற்காப்பு

பக்தியை எழுதி, அன்பை அரணாக்கும் நீங்கள் வன்முறை தூண்டும் வண்ணம் எழுதலாமா?

அன்பை அனைவருக்கும் பொதுவென்றேன்.
அவன் அரிவாளால் அதை துண்டு துண்டாக வெட்டிப் போடுவேன் என்றான்.
வெட்ட வருபவனை என்ன செய்யலாம்?

அன்பால் என்னை வெட்டிவிட்டு போ என்று தலையை நீட்டவா?
இல்லை.
அரிவாளெடுத்த கையை உடைக்க வேண்டும்.
அடுத்த கையால் எடுத்தால் அதையும் உடைக்க வேண்டும்.
கைகளை இழந்த பின்பும் அழிக்க ஆட்களைக் கூட்டி வந்தால் அழிக்க நினைக்கும் மூளை கலங்கிப்போகும்படி அடிக்க வேண்டும்.
இது வன்முறை அல்ல.
தற்காப்பு.
தன்னை நம்பிய அன்பானவர்களைக் காத்தல்.

அதிகாரத்தோடு அழிக்க வருபவன் திருந்தவே மாட்டான்.
திருந்தாதவனுக்கு பகுத்தறியும் மூளை எதற்கு?
அதைச் செயலிழக்கச் செய்வதே சிறப்பு.
திருந்தனால் அரவணைப்பு.
முதுகில் குத்தினால் இல்லை மன்னிப்பு.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Mar-18, 10:35 am)
Tanglish : tharkaappu
பார்வை : 786

மேலே