வள்ளலார்
வள்ளலார்...
அன்பைப் போதித்த வள்ளலார்.
ஆன்மா நெறியே ஆன்மிகம் என்று உணர்த்திய வள்ளலார்..
இனிமையாய் தமிழில் அருட்பாக்களை அருளிய வள்ளலார்...
ஈசனே எம் தாய் தந்தையென்ற வள்ளலார்...
உள்ளத் தூய்மை போதித்த வள்ளலார்.
ஊனமான மனம் குணமடைய மருந்து தந்த வள்ளலார்.
என்றென்றும் என் நெஞ்சில் நிறைந்த வள்ளலார்..
ஏணியாக நின்று அன்பின் சிகரம் ஏற எனக்கு உதவிய வள்ளலார்.
ஐயமில்லா கொள்கைகளை என்னுள் விதைத்த வள்ளலார்.
ஒவ்வொரு உயிரும் இன்பமாய் வாழ வேண்டி நின்ற வள்ளலார்.
ஓங்கி நிற்கும் அருட்பிரகாச வள்ளலார்...