கிராமிய கவிதை
உன்னை கண்டு நாட்கள் பல ஆகிறதே
என் மாமாவே/
உன் மீது கொண்ட ஆசையை
மறைச்சி வைக்க முடியாம
தவிதவிச்சி நிற்கிறேனே_மாமாவே/
உன் வரவை பார்த்து இருந்த கண்களோ கண்ணீரில் நனைகிறதே//
நீ எங்கே ஓடி மறைந்தாய் என் ஆசை மாமாவே
பசியும் ஆற
வேலை தேடி தூரதேசம் சென்றாயோ
சேதி ஒன்னும் தெரியலையே
உன் வயித்து பசிக்கு
சாப்பாடு வேணும் என்றால்
நான் தாரேன் ஆசை மாமாவே//
பாரா முகமாக இருக்காதே
இராப்பகலா உன் நினைவு
நீ இன்னும் வரவில்லையே
என் நெஞ்சமெலாம் வாட்டுதடா
உன் நினைப்பில்
ஈரச் சுவரானேன் இடிஞ்சி விழுந்த
மண்ணானேன்