நீ நான் பரிசு

நான்
___________________________
கல்லூரி பேருந்தில் நீ படியேறும்
நேரம் வரை கால் கடுக்க நான்
அந்த நிறுத்தத்தில் காத்திருப்பேன் !

கனிந்த உன் இதழ் மலர்ந்து
முத்துப்பல் அழகாய் மிளிர
முகம் மலர்ந்த புன்னகை ஒன்றை
பரிசாக தரவேண்டும் !


ஒரே ஒரு முறை முகத்திற்கு
நேராக பாராமல்
ஒரு விழியால் ஓரப்பார்வை ஒன்றை
பரிசாக தரவேண்டும் !


ஒற்றை குறுஞ்செய்தியில் முத்த ஸ்மைலி
ஒன்றை கூடுதல் பரிசாக தந்து விட்டு
செல்லவேண்டும் !

மாலை நீ வரும்வரை உன் குறுஞ்செய்தி
பார்த்தே உன் நினைவோடு நான் இருத்தல்
வேண்டும் !

நீ !
____________________

காலம் தவறாமல் கண்டிப்பாய்
அந்த நிறுத்தத்தில் சரியான நேரத்திற்கெல்லாம்
நீ வந்து விடவேண்டும் !

யாரும் பார்க்கா வண்ணம் என்னை
அழகாய் நீ ரசித்திட வேண்டும் !


அந்நாளின் நான் அணிந்த உடையின்
அழகின் பெருமை பற்றி ஒற்றை குறுஞ்செய்தி
அனுப்பிட வேண்டும் !

மாலை வரும்வரை எத்தனை கவிதை
எனக்காய் எழுதி வைக்க முடியுமோ
எழுதி வைத்திருக்க வேண்டும் !

நீ கேட்ட பரிசை நான் தருவேன்
எனக்கான பரிசை நீ தரவேண்டும்

நீ !
நான் !
பரிசு !

எழுதியவர் : கவிஞர் முபா (1-Apr-18, 10:41 am)
பார்வை : 147

மேலே