தென்றலோடு ஆடியபோது ஆனந்தம்

மொட்டாக இருந்தபோது
மௌனம்
மலராக விரிந்தபோது
மணம்
தென்றலோடு ஆடியபோது
ஆனந்தம்
மண்ணில் உதிர்ந்தபோதும்
புன்னகை ராகம்
பூக்களின் வாழ்க்கை
அர்த்தமுள்ள தவம் !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Apr-18, 11:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 168

மேலே