துளி பூக்கள்
மெல்ல தேற்றும் உந்தன்
யுக்தி அழகு
அதற்காகவே மேலும் மேலும்
அழ வேண்டும் என்கிறது
என் மனது..
இருந்தும் அழுகையை
நிறுத்துகிறேன். நீ மீண்டும் மீண்டும்
தோற்கக்கூடாது என்று.
கேவலுடன் சிறு குழந்தையாய்
உந்தன் மடிதனில் தலை சாய்த்து
கொள்கிறேன்.. சந்தோஷமாகவே!!!
நித்தியமாய் உணர்கிறேன் ..
உந்தன் அன்பை.. அதற்கும்
அழுகிறேன் ஏனோ தெரியவில்லை..
- வைஷ்ண தேவி