முளைவிட்ட இடைவிடா நம்பிக்கை

பாழடைந்த வீட்டின் உச்சி சுவற்றில்
ஒளிவிடும் கீற்றாய்
ஒற்றை செடி ஆலமரம்
விரிசலில் வேர்பாய்ச்சி .

விதைகள் சேர்த்து, பருவம் பார்த்து,
நிலம் உழுது, உரம் தெளித்து
நீர் வார்த்து வளர்த்த
வித்தல்ல இது ..

உயிர்சங்கிலியில்
காகமோ, குயிலோ ,...
எங்கோ ஆலமரத்தில்
பறவைகள் பசியாறிய
எச்சத்தின் சொச்சம்
இங்கு உயிரின் உச்சமாய் .

கிடைத்த வாய்ப்பில்
உயிர்த்த இயற்கை ..
இனி என்னாவோம் என்ற
என்னமேதும் இல்லை,..
இதுவே நம்பிக்கையின் எல்லை .

எழுதியவர் : (5-Apr-18, 6:37 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 55

மேலே