உன்னோட வாழ்ந்திடணும்

தேகம் சுருங்கினாலும்
கேசம் நரைச்சாலும்
தேவதை தான் நீ
எனக்கு எப்பவும்
நான் காதலிப்பேன்
உன்ன நான் அப்பவும்

உங்கிட்ட பேசாம ஒருநாளும்
இருக்கமாட்டேன்
மோசமா ஒருநாளும்
நடக்கமாட்டேன்

மாசத்துல மூணு நாளு
மயங்கி நீ இருக்கையில
மடிமேல தாங்கிடுவேன்
பணிவிடையும் செஞ்சிடுவேன்

மல்லிகைப்பூ வாங்கி வருவேன்
தினமும்
மலர்ந்திடனும் பூப்போல
உன் முகமும்

மோதிரமா நானிருப்பேன்
உன் விரலுல
நீ மட்டும் தான் சேர்ந்திருப்ப
என் உசுருல

கொஞ்சம் நீ முகம் வாடி நின்னாலும்
நெஞ்சோட அணைச்சிக்குவேன்
நீ சொன்னதெல்லாம் செஞ்சிடுவேன்
என் எண்ணமெல்லாம் சொல்லிடுவேன்

உன்னோட சேர்ந்தே தான் சாப்பிடுவேன்
உனக்கு ஒருவாய் சோறாவது
ஊட்டிடுவேன்

பொத்திவச்ச ஆசையெல்லாம்
மொத்தமா நீ கொட்டிடணும்
பொண்டாட்டி உன்மேல
தினம் முத்த மழை பொழிஞ்சிடணும்

கருவ நீ சுமக்கயில
உன்ன கண் போல பாத்துக்குவேன்
தாய்போல தாங்கிடுவேன்

என் ஓய்வு நேரமெல்லாம்
உனக்கு ஒத்தாசையா நானிருப்பேன்
நாளுக்கு நூறு முறை
உன் பேர கூப்பிடுவேன்

கைத்தடி தேடும் வயசுலயும்
உன் கைப்பிடிச்சே நான் நடந்திடணும்
கண்மணியே உன் முகம் பார்த்தே
என் கடைசி மூச்சும் நின்னுடணும்!!!

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (7-Apr-18, 6:28 am)
சேர்த்தது : சுரேந்தர் கண்ணன்
பார்வை : 407

மேலே