உன் கண்களின் பார்வையடி கண்ணம்மா

உன் கண்களின் பார்வையால் -என்
நெஞ்சை தீண்டிவிட்டாய்.
கிள்ளிவிட்டாய், அள்ளிவிட்டாய் ,
தீண்டியது அரவமல்ல
பெண்பாவை நீதான்
என்றது புரிந்தபோது
உந்தன் பார்வையின் தீண்டல்
நெஞ்சத்தை அள்ளியது
உள்ளமதை கொள்ளைக்கொண்டது
இன்பம் பெருக்கியது
பார்வையால் என்னை தீண்டிவிட்டாய்
கொள்ளைகொண்டாய் பாவையே
காலமெல்லாம் உன் பார்வையின்
தீண்டலிலேயே இருந்திடலாம்
அதுதரும் இன்பத்திலே என்று
நான் நினைப்பது தவறா சொல்வாயோ
என் கண்ணவளே , காதலியே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Apr-18, 9:25 am)
பார்வை : 94

மேலே