நாளை மற்றுமொரு நாளே

அத்துணை கேளிக்கையும்
உண்டு இத்தினம்
கரை பெருகும் ஆனந்தம்.
உறவுகள் சிலிர்க்கும்.
ஒவ்வொரு புன்னகையும்
ஒவ்வொரு நம்பிக்கை.
யாவரும் நலமென்று
நெகிழ்ந்த உணர்வுகள்.
கொட்டினாலும் தீராத
கொண்டாட்ட குதூகலம்.
திருக்கோயில் சென்று
கண்கள் பணிக்க
பிரார்த்தனை கவசங்கள்.
எனக்கும்.நமக்குமாய்.
இன்று போல்தான் இனி
என்றும் விளம்பி விளம்பியது
மனதின் குரலாய்...
கையில் நாளிதழலுடன்
வாசலில் அமர்ந்தேன்.
எங்கோ செல்லும் பாண்டா
வந்து நின்றான்...
தென்னை மரமேறி உழைப்பாளி.
இன்னிக்கென்ன விசேஷம்
தெரியுமா ....கேட்டேன்...சொன்னான்...
இன்னி சனிக்கிழமை.
நாள நாயித்து கிழமை.

எழுதியவர் : ஸ்பரிசன் (14-Apr-18, 9:57 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 274

மேலே