இனி நீ மட்டும்

உன் பொய்மைகள் என்பது
கனவில் செதுக்கிய
பொம்மையாய் நீ மட்டும்.
காற்றுக்கு ஆடும்
கதவுகளாய் நீ
ஆடும் மனதில்
வந்து செல்கையில்
உன் சைகைகள் மட்டும்.
தேவதையின் கண்களில்
பௌர்ணமி நீ மட்டும்.
சாகா வரங்களில்
அமிர்தம் நீ மட்டும்.
வந்து வந்து
தொலையும் நாட்களில்
சாட்சிகள் நீ மட்டும்.
பாய்ந்த நதியின்
தொல் சிரிப்பில் விரியும்
பசுமை நீ மட்டும்.
என்னில் தளர்ந்த
எவற்றுக்கும் உயவு
இனி நீ மட்டும்.

எழுதியவர் : ஸ்பரிசன் (18-Apr-18, 7:08 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : ini nee mattum
பார்வை : 591

மேலே