மாணிக்கமாய் நீ கிடைத்தாய்
எத்தனையோ பேர்
போக வர
பெருங்கூட்டத்தின்
நடுவே
உன்னைக் கண்டேனே
விதவிதமாய் உடை
ரசிக்க தகுந்த ஒப்பனை
இன்னும் பல
இவையேதும் இல்லை
ஆனாலும் நீ மட்டும்
என்னை ஈர்த்தாய்
எப்படி? ஏன்?எதற்காக?
விடையில்லை
குப்பையில் கிடைத்த
மாணிக்கமாய் நீ
கிடைத்தாய்
காய்லான் கடையில்
கண்டெடுத்த புத்தகம்!
நா.சே..,