காதல்

அன்பின் உருவே
ஆசைக் கனியே
இன்னல் துடைத்து
ஈகை அருள்வாய்
உன்னுள் பாதி
ஊடல் கொள்ள
என்னுள் மீதி
ஏற்றம் கொள்ள - விரல்
ஐந்தும் பின்ன
ஒன்றிய எண்ணங்கள்
ஓதிடும் நம் காதலை
ஒளடதம் தந்தாய்
அஃதே வியந்தேன்

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (19-Apr-18, 7:26 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : kaadhal
பார்வை : 368

மேலே