காம வேட்டையில் நான் இறையானேன் ஆஷிபா
இந்த கேடுகெட்ட உலகத்தில் என்னை கெடுக்கத்தான் நான் பிறந்தேனோ
கெட்டவனிடம் மாட்டி தவிக்கத்தான் நான் வளர்த்தேனோ
எனது எட்டு வயதிலே எமனுக்கு நான் இப்படியா என்னை அர்ப்பணிப்பேனோ
பாசக்கயிறு வீசும் எமனுக்குமா பரிவில்லை
முள் குத்தினால் வலிக்கும் என்றே பாதணி அணித்தேன் முள் தரையில் என் மேனி முழுவதும் முகம் பதித்து வலியெடுத்து வாய் அடைத்து போய் விட்டேன்
கடைசியாக அம்மா என்றழைக்க ஆசைதான் ஆனால் அதற்குள் அடக்கிவிட்டனர் என் மூச்சை
மிகுந்த வருத்தமும் மன நிம்மதியும் தொலைத்த ஒரு விஷயமிது .
படைப்பு
ரவி.சு