அன்பே வா அருகிலே🌻

அழகாய் வான் நீந்தும் பவுர்ணமி நிலவு நீ,🌕
பார்க்கலாம், ரசிக்கலாம்,
உனை அடைய முடியாது,
காலைத்துயில் எழுப்பும் கடலெழும்
செங்கதிரோன் போல நீ,
பார்க்கலாம், ரசிக்கலாம்,
உனை நெருங்க முடியாது,🌞
அனைத்தும் அணைத்துக் கொள்ளும் அணையாத நெருப்பு நீ,
குளிர் காயலாம், சமைக்கலாம்,
உனை தீண்ட முடியாது,🔥
அள்ள அள்ள குறையாது அன்பு நீரை
கொடுக்கும் ஆற்று நீராக,
வெட்ட வெட்ட சுரக்கும் கிணற்று நீராக உனை அள்ளி குடிக்க எப்போது நீ அருகில் வருவாய்?💟

எழுதியவர் : பாலமுருகன் பாபு (21-Apr-18, 8:59 am)
பார்வை : 371

மேலே