காதல்
அசைந்தாடி வந்தாய்
மிக மிடுக்காய், ஒய்யாரமாய்
சிற்றருவிபோலே , என் எண்ணத்தில்
வீழ்ந்து உந்தன் எழிலில்
குளிக்கவைத்தாய் ,உந்தன்
என்றும் மல்லிகை வாசம் தரும்
கார்மேக கூந்தல் என் மார்பில்
விரிந்து உந்தன் அழகில் நீராடிய
எனக்கு ஈரத்தை உலர்த்தும்
துவாலையை அமைந்ததுவோ