தூரா வானமாய்.....!

நான் பார்த்தால் அவள் முறைப்பாள்,
நான் நினைத்தால் அவள்
மறப்பாள்,
நான் விரும்பினால் அவள்
வெறுப்பாள்,
நான் நெருங்கினால் அவள்
விலகுவாள்,
நான் அவளை தேடி தேடி காதலிக்கிறேன், அவளோ
நிலம் வாடுவது தெரிந்தும்
மழை தூரா வானமாய் என்னை வாட்டி விட்டு போகிறாள்.....!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (25-Apr-18, 9:23 pm)
பார்வை : 73

மேலே