சதிராடும் கதிர் கூட்டம்

==============
கூவி என்னை அழைத்து
கூப்பாடு போட்டு
மெய்சிலிர்க்க வைத்த மச்சானே //
பூவா சிரிச்சுக்கிட்டு
என்னை தேடியது தான் ஏனோ//

சதிராடும் கதிர் கூட்டம்
அசந்து ஆடுவதை கண்டு//
ஆசையுடன் மனம் தாவி//
பறித்திடவே துடிக்குதடி
கண்ணம்மா//

என்னோடு சேர்ந்துக்கிட்டு
அறுவடை செய்திடவே வயல்களத்துக்கு வருவாயா//

கதை கதையாக கதை பேசி//
கலந்துபுட்டாய் நெஞ்சுக்குள்ள_ஆசை மச்சானே//
உன்னோடு துணையாக வந்திடுவேன்
நல்ல நாளாய்ச்சொல்லு
அறுவடையை வைச்சுவிடுவோம்

உன்னை நினைச்சிடவே இனிக்குதடி
பொழுது//வயல்களத்தில்
காத்திருப்பேன் கட்டாயம் வந்து விடு
பொட்டழகி

எழுதியவர் : அகிலன் ராஜா (25-Apr-18, 9:46 pm)
பார்வை : 65

மேலே