முடிவில்லாப் பயணம்
மூடுபனிக் கானகத்தே
முழுமதியின் ஒளி ஊடுருவலில்
முகவரி அறியாக் காதலைத் தேடி
முடிவில்லாது பயணிக்கிறேன்....
கானல் நீரோ...? காட்சிப் பிழையோ...?
காதல் நெஞ்சில் உரமேற்ற
களைப்பின்றி கலக்கமின்றி....
கடிதானப் பயணம் தொடர்கின்றேன்.....
மௌனப் புயல்வீசும் மானசீகக் காதலுக்கு
மதிப்பீடு சூனியமென மங்கை மனமறிந்தும்
மறுதலிக்க இயலாமல் மண்டியிட்டு மடிகிறது...
மாளாது மீளாது தானாகப் பாதை நகர்கிறது
இதோ... இதோ... இன்னும் சற்றுத் தொலைவு தான்...
இறுதியில் காணப்போவது
இல்லையென்ற முடிவுதான்...
இருந்தும் தொடரட்டும் இடரானப் பயணம்...
பயணிக்கும் போதாவது பனிக்கட்டும் இப்பாவை நெஞ்சம்...,,
கவிதாயினி அமுதா பொற்கொடி