அவள் தந்த முதல் முத்தம்

பூவின் மென்மை இதழ்கள்தானோ
என்று நினைத்து என் இதழ்களை-அவள்
இதழ்களோடு சேர்த்தேன் அப்பப்பா
என்ன சுகம் கண்டேன் அங்கு அந்த
ஸ்பரிசத்தில் பூவிதழ் மென்மையும்
உணர்ந்து அதில் தேன் சுவையோடு
இன்ப கிளர்ச்சி தரும் உஷ்ணம் சேர
என் இதழ்களின் சேர்க்கைக்கு அவள்
என்னை ஏற்று எனக்களித்த ஆசை
முத்துக்கள், இல்லை, காதல் ரத்தினங்கள்;
பூவின் இதழ்கள் ஸ்பரிசத்தில் வாடிவிடும்,
பூவை இவள் இதழ்கள் ஸ்பரிசத்தில்
மலர்ந்தன, சுவைத்தந்து, இதம் தந்து,
மலர் முத்துக்களாய்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Apr-18, 10:30 am)
பார்வை : 208

மேலே