என்னவள் அழகு
இந்திர லோகத்தில்
அப்சரஸ் ஸ்த்ரீகள்
ரம்பா,ஊர்வசி,திலோத்தமை
என்றிவர்கள் இருக்க
இந்திரன் முதலாய
தேவர்கள் மண்ணிற்குவந்து
மண்ணின் கன்னியர்களை
கண்டு மயங்கியது -அந்த
படைத்தவன் இங்கு
அழகின் மொத்த உருவாக
சில கன்னிகையரை
படைத்ததாலோ .............
என்னவளின் எழில்
பார்த்து பார்த்து மயங்கிய
என்னை இப்படி
நினைக்க தோன்றியது !