சிங்கிள்

பிப்ரவரி 14 அன்று

கடவுளும் நானும்

பெசன்ட் நகர் கடற்கரையில் அமர்ந்து கொண்டு

உரையாடிக்கொண்டிருந்தோம்,

“கடவுளே ஏன் சிலர்

இன்னும் சிங்கிளாகவே சுற்றுகின்றனர்?”

என்று கேட்டேன்

“இதற்கு எனக்கும் பதில் தெரியாதுப்பா..

தெரிந்திருந்தால் நான் ஏன் உன்னோடு

இங்கு உரையாடிக் கொண்டிருக்கிறேன்

எல்லாம் என் தலை விதி”

என்று வேதனையாக பதிலளித்தார் விநாயகர்

எழுதியவர் : நா.கோபால் (2-May-18, 5:56 pm)
சேர்த்தது : நா கோபால்
பார்வை : 354

மேலே