தனித்திருந்தேன்
அலைகளை இரசித்துக்கொண்டிருந்தேன்,
அங்கே அந்த அலையும் கரையும் ஒன்றையொன்று முத்தமிட்டு கிடக்கும் காதல் கோலத்தைக்கண்டு,
கண்டும் காணாதது போல் என் பார்வையை சற்று தொலைவாக உயர்த்தினேன்,
அங்கேயும்
அந்த தொடுவானமும்,தொலைதூரக்கடலும்
தொட்டுத்தொட்டு தொடரும் காதல் லீலைகளால் ஏங்கி உன் நினைவுகளை மட்டும் அனைத்தபடி கரையிலே தனித்திருந்தேன்....