காதலின் கறுப்பு சொத்து
காத்திருத்தலில் அறிவாயா அன்பின் கூவலை?
நின்றுகொண்டிருக்கும்
எனது நேரங்களும்
நினைவற்று சரிந்தது.
காலங்களை ஒடித்து ஒடித்து
புற்களில் எறிகின்றேன்.
அவையும் திக்கறிந்து ஒட்டிக்கொள்கின்றன
உன்னிடம் ஓடிவந்து...
எங்குதான் இருக்கிறாய்?
உன்னை தவிர்த்து விட்ட
உன் மனம் என்னெதிரில்
கூலாங்கற்களில்
விளையாடுகின்றன.
நானும் தொலைபேசியும்
முறைத்துக்கொண்டிருக்கிறோம்
அறிவற்ற பொழுதில்
பொழுதும்போகாமல்...
அறியமுடிந்ததெல்லாம் ஒன்றுதான்...
காலம் மறுக்கும் இப்பொழுதில் இனி
ஆவியாகும் உன் கண்ணீரென...