லார்ட் பைரன் அடிக்குறிப்பில் இருந்து

யாரும் வரும் போகும் உலகில்
யாரோ ஒரு பெண்
யாரோ ஒரு ஆண்.
யாரும் யாரையும்
அறியாத வாழ்க்கையில்
யாரும் அறியாமல்
தம்மில் அறிந்தனர்.
அறிந்து புரிந்ததை
யாரும் அறியவில்லை.
யாருக்கு தெரியாது
யார் யார்
யாருடன் என்பதும்...
யார் என்று கேட்ட பெண்?
யார் என்று சொன்ன ஆண்!
யார் மறைந்து போனது.
யாவரும் நலமென்று
யாரும் அறியாமல்
ஆணும் பெண்ணும்
யார் என்பதை மறந்திட
தொலைந்தது மீளவியலாது
ஒரு மனதில் இரு இதயம்.
யாரும் உளறும் உலகில்
யாரோ யாரிடமோ சொல்ல
யாரோ வந்து நசுக்கினர்.
இதயத்தை நசுக்கினர்.
இன்று...
யார் அந்த பெண்
யார் அந்த ஆண்...
யாரும் யாரிடத்திலும் இல்லை.

எழுதியவர் : ஸ்பரிசன் (6-May-18, 5:17 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 114

மேலே