என்னால் சபிக்கப்பட்ட கவிதை

என் கவிதையின்
கைகளும், கால்களும் கட்டப்பட்டு வெட்டப்பட்டிருக்கிறது
வன்முறையைப்பற்றி பன்முறை உரைத்ததால்
இம்முறை தாக்கப்பட்டு கிடக்கிறது

வாய்மையை நோ்மையாய் பேசியதால்
தூய்மையில்லையென தூக்கியெறியப்பட்டிருக்கிறது
ஒருவேளை எங்கேனும் நீங்கள் அதைக் கண்டீா்களெனில் எவருமறியாமல் புதைத்துவிடுங்கள்

மறுபிறவியில் சமத்துவம் பேசும் சாத்தானாக உருவெடுக்க சபித்திருக்கிறேன் நான்..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (7-May-18, 10:53 pm)
பார்வை : 83

மேலே