வானமே எல்லை
காதல் திருமணமும்
கசந்து போகும்
நிச்சயிக்கப்பட்ட திருமணமும்
நிலையில்லாமல் ஆகும்
கனவில் காண்பதும்
திரையில் காண்பதும்
நிஜமென்று நீ
நினைக்கும்வரை
அடி பெண்ணே உன்னைப்போல்
ஏமாளி யாவருமில்லை
துணைவன் என்பவன்
வினையாய் வந்தால்
துவண்டு விடாதே பெண்ணே
துக்கம் உன் கதையல்ல
துணிச்சலாய் நீ இருக்கும்வரை
துன்பத்திற்கு வருகையில்லை
வாழ்க்கை என்பது வாழத்தான்-அன்றி
வாழாவெட்டியாய் துவண்டிருப்பதிற்கில்லை
முயற்சிதனை முயன்றுபார்
வானமே எல்லை-என்றென்றும்
வசந்த மழை
~என்றும் அன்புடன் ஷாகி 💝