பகலை தீர்த்த குரல்

பகல் இரைச்சல் அற்றது.
மர்மங்களை மணந்து
நிழல்களில் கூடு கட்டும்.
காண்பவர் மனதினில்
குண்டுகள் நிரப்பும்.
பகல் கசப்பின் சாந்து.
சினத்தின் புல்லரிப்பு.
நாடகங்களின் மரணம்.
சீறி வளர்ந்து நில்லாது
படரும் எவ்வொன்றிலும்
தோல் வேலிகளாய்.
பகல் யாவரின் மனம்.
பகலின் உச்சமென்பது
கோட்டையின் சிம்மாசனம்.
ரகசியங்களை அதிராது
உண்ணும் ஜீவராசி.
மாயங்கள் அற்றது.
கொதிக்கத் துவங்கி
தளர்ந்து சாய்கையில்
மிதித்து நடக்கும்
காற்றில் தடுமாறும் இசையாய்.
அறியாது கை பட்டிட
நீயிட்ட கூச்சலில்
அஞ்சி சுருண்டது பகல்.

எழுதியவர் : ஸ்பரிசன் (8-May-18, 6:26 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 61

மேலே