உழவனின் மகள்

துளையிடா தோட்டாக்களாய்,
வெட்டியெடுக்கா வைரமாய்,
எய்யப்படாத அம்பாய்,
வீழ்த்தப்படா வாளாய்,
தொடுக்காத மாலையாய், தூண்டிலில் மாட்டா மீனாய்,
துள்ளிஓடா மானாய்,
சுவாசிக்கதெரியா உயிரினமாய்,
ஒளிச்சேர்க்கை செய்யா செடிகொடிகளாய்,
விதைக்கப்படா விதையாய்,
எரியத் தெரியா கனலாய்,
காணமுடியா கனவாய்,
கலைக்கமுடியா துயிலாய்,
எழும்பாத அலையாய்,
எழுதத்தெரியா தூவலாய்,
புனையப்படா ஓவியமாய்,
படைக்கப்படா காவியமாய்,
அடைக்கப்படா அணைகளாய்,
உருவாக்கப்படா உயிராய்,
ஊதப்படா புல்லாங்குழலாய், மீட்டப்படா வீணையாய், காதலில்லா மனிதமாய்,
காற்றில்லா சுவாசமாய்,
வாழ முடியாத வாழ்க்கையாய் அனைவராலும் நிராகரிக்கப்பட்டாலும்........
இன்று!!
உழவனின் மகளாய் உயிர்ப்பெற்று,
அந்த வானவில்லின் எட்டாம் வண்ணமாய் வலம் வருபவள் ....

எழுதியவர் : இரா.சுடர்விழி (8-May-18, 8:51 pm)
பார்வை : 97

மேலே