அகமதுவும் குளிர்ந்திடுமோ

அரைக்கால் சட்டையுடன்
அறியாத வயதினிலே
ஓடுகின்ற தண்ணீரில்
ஓடம்போல வடிவமைத்து
காகிதத்தில் மடித்திட்டு
கால்களில் நீர்நனைக்க
நண்பனுடன் அமர்ந்திட்டு
நண்பகல் வேளையிலும்
ஓடவிட்டு மகிழ்ந்தோமே
காடுபோகும் நேரம்வரை
மறக்கத்தான் முடியுமோ
மனதிலிருந்து அகலுமோ
அப்பருவம் திரும்பிடுமோ
அகமதுவும் குளிர்ந்திடுமோ
சாதிமதமும் தெரியாது
பொய்யுரைக்க தெரியாது
வஞ்சகச்செயல் தெரியாது
பிரித்தாளவும் தெரியாது
வன்முறைகள் தெரியாது
எந்நேரமும் இன்புற்றிருக்க
ஆனந்தமும் நிலைத்திருக்க
நெஞ்சமும் நினைத்திடுமே !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-May-18, 8:04 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 167

மேலே