முதுமொழிக் காஞ்சி 62
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பெருஞ்சீ ரோன்றன் வெகுளியின்மை பொய். 2
- பொய்ப் பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் பெருஞ் செல்வத்தைப் பெற்றான் ஒருவன் வெகுளாமை பொய்.
பதவுரை:
பெருஞ்சீரோன் - பெருஞ்செல்வம் பெற்றிருப்பவன், வெகுளி இன்மை - கோபியாதிருத்தல், பொய் - பொய்யாம்.
பல காரியங்களையும் பல ஏவலாளரையும் கவனிப்பதில் ஏதாவது தவறு கண்டவிடத்துப் பெருஞ்செல்வர் கோபிப்பது இயல்பு உலக வியல்பு நோக்கிக் கூறியது.