எரிமலை சாம்பல்கள்

கற்பனை திரவம்
எழுத்தின் வழி கசிகிறது...
உணர்வுகள் பிழம்பாக
வெடித்து சிதறியது;
உள்ளத்தில் வழிந்தோடிய
தீ குழம்பு
எரித்து எரித்து
எழுதி தீர்த்தது
காதலையும் மோகத்தையும்...
எரிமலையில் மிஞ்சிய
சாம்பலாய் என் எழுத்துக்கள்...
என் செய்ய..?
கவிதைகளை
அனாதை பிள்ளைகளாய்
தவிக்கின்றன
உன் மடி சேராததால்...
அழுது அழுது
மரித்துபோகிறது
நான் வாங்கும் பேனாக்கள்
பிரிந்து விட்ட உனக்காக..!

எழுதியவர் : சுரேஷ் குமார் (16-May-18, 2:02 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 245

மேலே