ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஆரம்பமானது
கர்னாடகத்திலும்
குதிரைபேரம் !

எண்ணிக்கை குறைந்து
எண்ணம் பொய்த்தது
எல்லோருக்கும் !

தாமரைப்பூ
மொட்டானது
கர்னாடகத்தில் !

கோட்டையைப் பிடிக்கும்
மனக்கோட்டை தகர்ந்தது
தேர்தல் முடிவு !

வாரியம் அமைக்காமல்
வாரலாம் வாக்கு
பொய்த்தது கனவு !

செய்வார்கள்
பஞ்சமாபாதகம்
பதவி வெறி !

மக்கள் வைத்தனர்
அரசியல்வாதிகளுக்கு ஆப்பு
தேர்தலில் !

இரண்டும் ஒன்றுதான்
முன்விட்டை பின்விட்டை
கட்சிகள் !

வேண்டும் கவனம்
நடக்கிறது விபத்து
இமைக்கும் நேரத்தில் !

கேப்பையில் நெய்
நம்பும் மூடராக
வாக்காளர்கள் !

தர வேண்டாம் மீன்
கற்றுக் கொடுங்கள்
மீன்பிடிக்க !


வந்தது சிரிப்பு
சுவரொட்டியைப் பார்த்து
வருங்கால முதல்வரே !



வருந்துவதில்லை
சுமைக்காக
சுமைதாங்கிக்கல் !

மாறுபடுகிறது
அன்றும் இன்றும்
பாசம் !

சாதி மத ஆராய்ச்சி வேண்டாம்
தாருங்கள் தண்டனை
குற்றவாளிக்கு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (16-May-18, 7:13 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 124

மேலே