இயற்கை கவிஞர் எமிலிடிக்கின்ஸன் எழுதியது

"இயற்கை" நாம் பார்ப்பது-
மலைகள்,பிற்பகல் -அணில்
கிரகணம்-பொன்வண்டு,
இல்லை, இயற்கை சுவர்க்கம்-
இயற்கை நாம் காதால் கேட்பது-
பாடும் பறவை-கடல்-இடி-
சுவர்க்கோழி ; இல்லை,இயற்கை
நல்லிணக்கம்-இயற்கை என்பது
நாம் அறிந்தது ,இருந்தும் கலை
ஏதுமில்லை நம்மிடம் அதை சொல்ல,
இயற்கையின் எளிமை-நம் அறிவிற்கும்
எட்டாதது.

எழுதியவர் : தமிழாக்கம் வாசவன்-தமிழ்ப (17-May-18, 3:55 pm)
பார்வை : 72

மேலே