உயிரில் கலந்தவள் நீ...

முதன்முதலாய் உனைப்பார்த்த போது
காதலைக் கண்டேன்
நெஞ்சுக்குள் கோடி மலர்கள்
பூத்திடக் கண்டேன்
யாருக்கும் நெஞ்சம் திறந்ததில்லை
திறந்தபின் உன்னை மறந்ததில்லை

முதன்முதலாய் உனைப்பார்த்த போது
காதலைக் கண்டேன்
நெஞ்சுக்குள் கோடி மலர்கள்
பூத்திடக் கண்டேன்...

உன் பெயரென்ன தெரியாது
ஊரென்ன உறவென்ன அறியாது
உயிரில் கலந்தவள் நீ தான் என்பதை
உள்ளம் கூட அறியாது
எனக்காய்ப் பிறந்து என்னைத் தேடி
வந்தவள் தேவதை நீ தானே
உனக்காய் வாழ்ந்து உன்னில் கரைந்திட
உறுதி கொண்டேன் நான் தானே

முதன்முதலாய் உனைப்பார்த்த போது
காதலைக் கண்டேன்
நெஞ்சுக்குள் கோடி மலர்கள்
பூத்திடக் கண்டேன்...

கண்ணெனைக் கொள்ளை அடித்ததடி
காதலில் இதயம் துடித்ததடி
உனையும் எனையும் சேர்த்தது காலம்
காதலில் கொண்டு முடித்ததடி
சிரிக்கும் அழகே சிவப்பு மயிலே
சித்திரைப் பௌர்ணமி ஒளிச்சுடரே
இருக்கும் வரைக்கும் உனககுள் இருப்பேன்
உயிரில் கலந்த என்னுயிரே

முதன்முதலாய் உனைப்பார்த்த போது
காதலைக் கண்டேன்.
நெஞ்சுக்குள் கோடி மலர்கள்
பூத்திடக் கண்டேன்
யாருக்கும் நெஞ்சம் திறந்ததில்லை
திறந்தபின் உன்னை மறந்ததில்லை
முதன்முதலாய் உனைப்பார்த்த போது
காதலைக் கண்டேன்
நெஞ்சுக்குள் கோடி மலர்கள்
பூத்திடக் கண்டேன்..

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (17-May-18, 8:46 pm)
சேர்த்தது : RAJA A_724
பார்வை : 499

மேலே