வான வீதியில்
வான வீதியில் மேக ஊர்வலம்
***வனப்பில் விழிகள் விரிந்திடும் !
வான வில்லதும் வண்ணக் குடையென
***வடிவு காட்டிச் சிரித்திடும் !
வானம் பாடியாய்க் கானம் பாடியே
***மழையும் நிலத்தில் பொழிந்திடும் !
வானத் துளிகளின் முத்தம் பெற்றதும்
***மண்ணும் நாணிச் சிலிர்த்திடும் !!
சியாமளா ராஜசேகர்