அவள் நாணத்தை ருசிக்கிறேன்

அகமெங்கும் இறக்கி
வைத்த காதல்
அங்கமெங்கும் ஏற்றி
விடுகிறது மோகத்தை...
காயங்களை
மன்னித்துவிடு;
ஏற்புடையதல்ல
ஒரு முத்தத்தில்
சேர்ந்து செய்திட்ட
குற்றத்திற்க்கு
என்னை மட்டும்
நீ கடிதல்...
எங்கே தான்
எவ்வளவு தான்
வைத்திருக்கிறாய்
நான் பருக பருக
தீர்ந்திடாத
உன் நாணங்களை...?

எழுதியவர் : சுரேஷ் குமார் (5-Jun-18, 3:16 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 1766

மேலே