380 குணங் கொள்ளின் குறைவிலாப் புகழ் கைகூடும் - புகழும் இகழும் மதியாமை 5
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
மங்கலில் சீர்த்தி வேட்டாய்
= மடஞ்சினம் உலோப மோகம்
அங்கதம் முதல்யா விற்கும்
= விடைகொடுத் தறிவன் பீகை
பங்கமில் குணங்கள் யாவும்
= வாழுமோர் பதிநீ யாயின்
சிங்கலில் புகழ்கொள் வாயுன்
= சிரத்தின்மேல் ஆணை நெஞ்சே. 5
- புகழும் இகழும் மதியாமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நெஞ்சே! நீ கேடில்லாத புகழை விரும்புகின்றாய்.
அதற்கு அறியாமை, கோபம், கருமி குணம், காமம், பொய் முதலிய குற்றங்கள் அனைத்தையும் நீக்கிவிடு.
அறிவு, அன்பு, ஈகை முதலிய குற்றமற்ற நற்பண்புகள் யாவும் வாழும் ஓரிடமாக நீ இருப்பாயானால், குறைவில்லாத புகழ் அடைவாய் என்று உன் தலைமேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
மங்கல் - கேடு. அங்கதம் - பொய். சிங்கல் - குறைவு.