மறக்கவும் முடியுமா

பளபளக்கும் பளிங்கு மாளிகை
பணிவிடை புரிய பணியாட்கள்
காவல் காக்கும் காவலாளிகள்
அழைத்ததும் ஓடிவர அடியாட்கள்
அரணாக அழகுமிகு தோட்டம்
எழிலார்ந்த சூழலில் பள்ளியறை
கண்கவர் கவின்மிகு கட்டில்
படுத்து உறங்கிட பட்டுமெத்தை
தூங்கிடத் தூண்டிடும் குழலிசை
அத்தனை இருந்தும் அனைவரும்
மறக்கவும் முடியுமா ஒன்றை
மண்ணில் உள்ளவரை எவரும்
சேயாய் சாய்ந்துறங்கிய தாய்மடி !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (7-Jun-18, 4:01 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 1102

மேலே