உயிரானவள்
பெண்ணொன்று கண்டேன், அவள் பெண்ணில் சிறந்தவளெனக் கண்டேன்...
பரந்த வானில் விழும் வெளிச்சம் போல, என் வாழ்வில் வந்த விடிவெள்ளி அவளெனக் கண்டேன்...
காற்றில் வெறுமையாய் அசைந்த என் விரல்களின் இடைவெளியை நிரப்பியது அவளெனக் கண்டேன்...
என்னை மறந்துபோன நிமிடங்களில் என்னை உணரச் செய்தது அவள் நினைவுகளெனக் கண்டேன்...
என் இதயத் துடிப்புகளில் ஒலிப்பது அவள் பெயரெனக் கேட்டேன்...
விழிமூடும் போதெல்லாம் அவள் முகம்மட்டும் தெரிவது விந்தையெனக் கண்டேன்...
காற்றுக்கு மொழி சொல்லித் தந்தது அவள் குரல்தான் என கேட்டு அனுபவித்தேன்...
என்னருகில் அவள் இல்லையெனும்போது, உயிற்போகும் வலி என்ன என உணர்ந்துகொண்டேன்....