சம்மதமா சொல் கண்ணே

வண்டுருளும் விழியழகி
வட்டநிலா முகவழகி
தண்டுவாழைக் கையழகி
தளிர்வெண்டை விரலழகி
குண்டுமல்லி மணம்வீசும்
கொடிமுல்லை உடலழகி
வாண்டுபோல் மனம்கொண்ட
வண்ணமலர்ச் சொண்டழகி
பெண்டிரும் உன்னெழிலை
பேசுகின்ற பேரழகி
கண்களினால் சம்மதத்தை
காட்டிவிட்டால் போதுமடி
காலமெல்லாம் உன்னைநான்
காப்பேனே என்கண்போலே



ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (13-Jun-18, 2:10 pm)
பார்வை : 358

மேலே