தாயே

நானாக நானும் இல்லையே

எங்கு சென்ற போதும்

ஏதேதோ எண்ணம் கொல்லும்

தாயான தாயும் இல்லையே

இங்கு இந்த நேரம்

நியாயமா….

ஆயிரம் ஆயிரம் ஞாபகம் நெஞ்சினில்

நாளுமே நீங்காதே

என் அன்னையே

ஆரிரோ பாடிய ஞாபகம் நெஞ்சில்

என்றுமே நீங்காதே

என் அன்னையே

பாசமா நேசமா

உன் பாதம் கட்டிக் கொண்டேன் நான்

வாழவா நான் ஆள‌வா

பசி அள்ளித் தின்றாய் நீ

தந்தையா அன்னையா

என் சொந்த பந்தம் எல்லாமே நீ

கந்தையா கண்ணீரா

அந் நாட்கள் சொர்க்கம் தானா ?

எங்கே

நெற்றி தனைத் தொடும் அந்த விரல்

காணநெஞ்சம் தவிக்கிறதோ

எங்கே

என்னைக் கொஞ்சு கின்ற செல்லக் குரல்

மீண்டும் அது ஒலித்திடுமோ

பஞ்சணை மெத்தையும் வந்திடலாம்

அன்னையின் சேலையைப் போல் வருமா

அறுசுவை உணவுகள் வந்திடலாம்

அன்னையின் கைப்பிடி போல் வருமா ?

பேர் புகழ் தேசமும் தந்திடலாம்

அன்னையின் வார்த்தையைப் போல் வருமா ?

ஆயிரம் நேசங்கள் பூத்திடலாம்

அன்னையின் புன்னகை போல் வருமா ?

தாயே

வெற்றி பெற்றேன் நானே

என் தாயே

என்னைக் காண வாயேன்.

நீயே

எந்தன் ஜீவன் தாயே..

இன்றுநீயும் இல்லா வாழ்க்கை கொல்லுதே



சேவியர்

எழுதியவர் : (13-Jun-18, 8:46 pm)
Tanglish : thaayaye
பார்வை : 26

மேலே